Here Andal explains the good results when we follow the nombu
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
“When we follow this nombu by bathing early, singing the names of Narayanan who measured all the worlds with his Trivikrama avatharam, our country will flourish with timely and enough rains, with the result of which, the crops will grow well and the fish will swim merrily in the ponds filled with water. The bees will rest on the well bloomed flowers; the cow will fill the vessels with milk the moment her udder is touched to milk them.”
Here Andal portrays the richness and prosperity that will result on following the paavai nombu.
